NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் வைக்கப்பட்ட மலர் வளையத்தால் பதற்றம்!

கொழும்பு – நுகேகொட பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் வசிக்கும் குற்றவாளியொருவரால் மலர்வளையம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகேகொட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த மலர்வளையத்திற்கு அருகில், “நம்மை விட்டுப் பிரிந்த போசடாவுக்கு (தொழிலாளியின் பெயர்) ஆழ்ந்த இரங்கல்” என பெரிய எழுத்திலும், “உனக்கு நான் கடைசிக் கடிதம் எழுதுகிறேன்” என்று அட்டைப் பெட்டியில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகரின் வீட்டுக்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகக் கூறப்படும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த இருவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles