NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சப்புகஸ்கந்த பெற்றோல் உற்பத்தி அலகை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெற்றோல் உற்பத்தி அலகை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலகில் இடம்பெறவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர்  8ஆம் திகதி வரையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெற்றோல் உற்பத்தி அலகு இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கு அவசியமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles