NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சற்று முன்னர் இரத்தினபுரியில் கோர விபத்து !

இரத்தினபுரியில் லொறி மற்றும் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் பத்துல்பான பிரதேசத்தில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேனில் இரண்டு சிறு குழந்தைகளும் பயணித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்தவர்களை அங்கிருந்த பிரதேசவாசிகள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles