NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறையில் இருந்து விடுதலையான யாழ் இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று(30) இடம்பெற்றுள்ளது.

யாழ்.நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இளைஞனின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து  விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles