NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீதாவாக்க சுற்றுலா புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்!

சீதாவாக்க ODC சுற்றுலா புகையிரத சேவை நாளை முதல் வார இறுதி நாட்களில் மீண்டும் முன்னெடுக்கப்படுமென மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

அண்மைய சீரற்ற வானிலை காரணமாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதன்படி, நாளை முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த புகையிரத சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புகையிரதம் நாளை காலை 8.25 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பி்ன்னர் மாலை 6.50 க்கு அவிசாவளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles