(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் 100க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன், சுமார் 6,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது.
அத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சீனாவில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவானது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பீஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.