(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டின் சுகாதார அமைப்பு பலவீனமடைந்துள்ளமை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.







