NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் பலி!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார், இராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது. விபத்துக்குள்ளான சுரங்கம் தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles