ஓமந்தை பகுதியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து ஓமந்தை – புதியவேலர் – சின்னக்குளம் பகுதியில் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததிலேயே 2 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.