NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூடானில் உள்நாட்டு யுத்தம் – 48,00,000 பேர் இடம்பெயர்வு!

R.M Sajjath

சூடானில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்தால் 48 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் ஏற்பட்டது.

இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அத்துடன், ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

அந்தவகையில், சூடானில் இடம்பெறும் உள்நாட்டு போரால் சுமார் 48 இலட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles