(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் மோதல் இடம்பெற்று வருகின்றது.
இதில் இதுவரை 4000 இலிருந்து 10000 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூடான் மோதல் காரணமாக சூடானில் இருந்து 50 இலட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்தவர்களில் 40 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். 7.50 இலட்சம் பேர் சர்வதேச அகதிகளாகியுள்ளனர்.
அவர்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.