NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெருந்தொகை தங்க நகைகளை கடத்த முற்பட்ட வேளையில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்போது பறிமுதல் செய்யப்பட்ட 13.5 கிலோ தங்கத்தின் பெறுமதி சுமார் ஒன்பது கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (8) சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவருடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தங்க கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles