(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
40ஆவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.