NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மனி பயணம்…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனிக்கு பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பேர்லின் உலகளாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றவும் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகளாவிய விவாதம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்க விஜயங்களை நிறைவு செய்து நேற்று நாட்டை வந்தடைந்தார.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்கான இறுதிக் கலந்துரையாடல் நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது கடன் தவணையை இலங்கை பெறுவது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles