NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெஸ்ட் கிரிக்கெட் – இலங்கை 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து டிக்ளேர்!

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நாணயசுழற்சியில் வென்ற அயர்லாந்து அணிகள் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 492 ரன்னில் ஆல் தோல்வியுற்றது.

டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்ய 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டதில் வீரர்கள் கருணரத்னே, நிஷான் மதுஷ்கா ஆகியோர் நிதானமாக ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 228 ரன்கள் சேர்த்த நிலையில் கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷ்கா 149 ரன்னும், குசால் மெண்டிஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மதுஷ்க, குசால் மெண்டிஸ் 268 ரன்கள் சேர்த்தது. மதுஷ்க இரட்டை சதமடித்து 205 ரன்னில் தோல்வியுற்றார். அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 245 ரன்னில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 212 ரன்கள் பின் தங்கிய நிலையில், அயர்லாந்து அணி இரண்டாவது இன்ன்னிங்சை தொடர்ந்தது.

நான்காம் நாள் முடிவில் அயர்லாந்து 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் அயர்லாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற போராடுவது உறுதி.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles