NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தடாகத்தில் இருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு!

ஹொரணை – தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள தடாகத்தில் கிடந்த நிலையில், இராணுவ வீரரின் சடலத்தை இன்று காலை மீட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எத்திலிவெவ பிரதேசத்தை சேர்ந்த 7வது ஆயுதப்படை பிரிவின் வீரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இராணுவ வீரர் நேற்று நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துக்கொள்ளவில்லை. தேடிப்பார்த்த போது அவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இராணுவ முகாமில் தடாகத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகஅங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles