NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பாதிப்பு

தாய்மார்கள் குழந்தைகளுக்கு தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார சூழ்நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விடயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதேயாகும்.

குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்” எனவும் பிரியங்கனி சுசங்கிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles