உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு தலதா மாளிகையை வழிபடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர், கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
தலதா கண்காட்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை விசேட தலதா கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.