NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலவாக்கலை பிரதேசத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!


தலவாக்கலை பிரதேசத்தில் 11 சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.

அண்ணனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் பெற்றோர் கொழும்பில் பணிப்புரிந்து வரும் நிலையில் சகோதரர்கள் இருவரும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளனர்.

அண்ணனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து பாட்டியுடன் கோயில் சென்றுவர அழைத்த போது அவர் மறுத்ததாகவும் பின்னர் பாட்டியும் சகோதரனும் வழிபாடுகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை அயலவர்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles