NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் தாயின் கால்களை பிடித்துக்கொண்டு அழுத குழந்தை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கம்பளையில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய இளம் தாயின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கம்பளை – புரஸ்ஸ டெல்டா தோட்டத்தின் வடக்கு பகுதியிலே இளம் தாய் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒன்றரை வயதுக் குழந்தை, உயிரிழந்த தாயின் கால்களைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்த நிலையில், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அங்கு விரைந்த நபர், அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தாய், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வானொலியை சத்தமாக ஒலிக்க செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவித்த புரஸ்ஸ பொலிஸார், வீட்டை சோதனையிட்ட போது, தாய் தனது குழந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததுள்ளது. அதில் ‘தங்கம் நீ கவனமாக இரு… நான் செல்கிறேன்… இப்படிக்கு மம்மா’ என அதில் எழுதப்பட்டிருந்தது.

குறித்த பெண்ணின் கணவர் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், மரணத்திற்கான காரணம் தனக்கு தெரியாது என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அவர் கூறியுள்ளார்.

கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலத்தா சம்பவ இடத்திற்குச் சென்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles