NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கான பிடியாணை!

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கான பிடியாணைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3ஆம் திகதி இராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு பிடியாணைகைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதனை நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles