NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெஹிவளையில் துப்பாக்சி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு – 48 மணி நேரத்தில் ஐந்தாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

தெஹிவளையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடத்தை வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது வலது தோள்பட்டைக்கு அருகில் 2 துப்பாக்கிச் சூட்டுக்களுடன் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய நகர சபை ஊழியர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், அதில் தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், நேற்று காலை காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகமவில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தங்காலையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் இருவர் காயமடைந்துள்ள நிலையில். இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் கடந்த 48 மணித்தியாலங்களில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles