NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது..!

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா (ஏப்ரல் 13 மற்றும் 14) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் செயல்படும் மதுபானக்கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Share:

Related Articles