NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்..

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) ஓரளவு மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles