நாட்டில் புதிய வரி அறவிடப்பட்டதனைத் தொடர்ந்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்றைய தினம் (19) தெரணியகலவில் ஊடக சந்திப்பின் போது சீனித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் 19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.