NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையே 5ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை!

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் நாணயசுழற்சியில் ஜெயித்து முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக அணித்தலைவர் டாம் லாதம் 64 ரன்களும், டேரில் மிட்செல் 33 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 88 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் இப்திகர் அகமதுவின் அதிரடியால் ஆட்டம் கடைசி ஓவர் வரை நகர்ந்தது.

இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை ஜேம்ஸ் நீஷம் வீசினார். அபாரமாக பந்து வீசிய ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததுடன் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4ஆவது போட்டி ராவல்பிண்டியில் நாளை இரவு 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles