NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீரில் மூழ்கி இருவர் பலி!

மஹவெல ரூனெயளர் ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாமுல்ல – கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை மற்றும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகளை அடுத்து உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கல்கிரியாகம – உஸ்ஸான பாலத்திற்கு அருகில் உள்ள ஹவன்வெல்ல ஓயாவில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஆபத்தான நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 37 வயதுடைய உஸ்ஸான, தேவஹுய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles