நீர்கொழும்பு – ஏத்துகால கடற்பகுதியில் நீராட சென்ற 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
20 முதல் 23 வயதுகளையுடைய 3 இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மூவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேநேரம், காணாமல் போனவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.