NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீர் விநியோகிப்பதில் தடை!

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த நீர் விநியோகத்திற்கான தற்போதைய தேவை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

“இதன் விளைவாக, சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த அல்லது குறைந்த அழுத்தத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று நீர் வாரிய ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நீர் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles