NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜரிலிருந்து தமது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் ஆரம்பித்தது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நைஜரிலிருந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு ஆரம்பித்துள்ளது.

நைஜரில் கடந்த வாரம் பெற்ற இராணுவப் புரட்சியையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரான்ஸ், ஐரோப்பிய பிரஜைகளை நைஜரிலிருந்து வெளியேற்றுவற்கு 3 விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் முதல் விமானப் பயணம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

எயார்பஸ் ஏ330 ரக விமானத்தின் மூலம் 272 பேர் பயணித்தனர் எனவும் இவர்கள் பாரிஸ் நகரை வந்தடைவர் எனவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கெத்தரின் கொலோனா நேற்று தெரிவித்துள்ளார்.

நைகர் ஜனாதிபதி மொஹ்மத் பஸோம், கடந்த வாரம் அவரின் பாதுகாப்புப் படையினரால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். நைகர், பிரான்ஸின் காலனித்துவ நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles