NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பண்டிகை காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட நடைபாதை வியாரிகளுக்கு அனுமதி!

இம்மாதம் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறின்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என்பதுடன், கொலோம்தோட்டை ஐக்கிய வர்த்தக சங்கம் மற்றும் ஏனைய நடைபாதை வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர் அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதாக சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடிய ரத்நாயக்க, கூட்டத்தின் போது நடைபாதை வியாபாரிகள் சிலரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles