NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2023ஆம் ஆண்டுக்கான பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் 58,770 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 53,965 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவசாய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது.

Share:

Related Articles