NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை!

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்தியர்கள் இந்த வருடம் இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னரே இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் வைத்தியர்கள் வெளிநாடு செல்வது சாதாரண விடயமாகிவிட்டதாகவும், இதன் காரணமாக வைத்தியசாலைகளின் மருத்துவப் பிரிவுகள் கூட மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles