NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்!

எதிர்வரும் 25ஆம் திகதி பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), மொரந்துடுவ, பொம்புவல, பிலமினாவத்தை, தர்கா நகரம், பெந்தோட்டை, அளுத்கம, களுவாமோதர மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அதன்படி குறித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 9 மணி நேரம் குடிநீர் விநியோகம் இடைநிறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles