NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் பஸ் விபத்து – 28 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்இ வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்குக் காரணம் பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால்இ பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாகஇ அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வீதி விதிகளை சரியாக பின்பற்றாததாலும்இ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் இதுபோன்ற வீதி விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.

இந்த மே மாதத்தில் மட்டும் 18ஆம் திகதி நேரிட்ட விபத்தில் 13 பேரும்இ கடந்த 3ஆம் திகதி நேரிட்ட விபத்தில் 20 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles