NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கர்ப்பிணித்தாயொருவர் நேற்று மாலை  உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இமேஷா குமாரி  என்ற மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாகவும்,

பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles