NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பா.ஜ.க வெற்றி – நபர் ஒருவர் கை விரலை வெட்டி காணிக்கை!

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 4ம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது.

அன்றைய தினம் இந்தியா கூட்டணி முன்னணி வகிக்கிறது என தெரிந்ததும் மன உளைச்சலுக்கு ஆளான துர்கேஷ் பாண்டே(வயது 30) சத்தீஸ்கரில் உள்ள காளி கோயிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு மனமுறுகி பிரார்த்தனை செய்ததுடன் பாஜக வெற்றி பெற வேண்டினார் 

மாலை வேளையில் என்டிஏ கூட்டணியின் வெற்றி உறுதியானததை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த துர்கேஷ் பாண்டே, கோயிலுக்கு சென்று தனது இடது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தினார்.

கையில் இருந்து ரத்தம் வழிந்து ஓட, வலியால் துடிதுடித்த துர்கேஷ் பாண்டேவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles