NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியர்கள்!

பிரசவத்திற்காக சென்ற கர்ப்பப்பையை அகற்றிய சம்பவம் ஒன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில்,  

“கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27.06.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

இது மருத்துவர்களின் தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து இராஜதுரை சுரேஸ் என்பவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று ( 26.09.2023) முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள்“ என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Share:

Related Articles