NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்திற்கு புறப்பட்டார்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில் நாளை நடைபெறும் ( BIMSTEC ) பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்றபதற்காக தாய்லாந்திற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார்.

அவர் அந்நாட்டில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 3 நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கான என்னுடைய பயணம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை அமையும் என குறிப்பிட்டுள்ளதுடன் இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக என்னுடைய இந்த பயணம் அமைகிறது என தெரிவித்துள்ளார்

அதன்படி இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி நாங்கள் மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles