NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபாகரனுக்கு முதன்முறையாக வீரவணக்கம்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் உலகெங்கிலும் தற்போது வரை பேசுபொருளாகவே காணப்படுகின்றது.

2009 ஆம் அண்டு இறுதி யுத்தத்தில் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாடு ஒன்றில் வாழும் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர், “2009 ஆம் அண்டு மே 18ஆம் திகதி இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் நீத்ததாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த நாளில் டென்மார்க்கில் பிரபாகரனுக்கு முதன்முறையாக வீர வணக்கநிகழ்வு நடைபெறவுள்ளது.

பிரபாகரன் பெயரில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை” என மனோகரன் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles