NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரார்த்தனையின் போது சரமாரியான துப்பாக்கிச்சூடு – 15 பேர் பலி!

நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற பிரார்த்தனையின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில், அங்கு திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்து, பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles