NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேசிலில் வெள்ளம் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – 149 பேர் பலி

பிரேசிலில் அடை மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைவதால் மேலும் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில்   வெள்ளத்தால் 149 பேர் உயிரிழந்துள்ளதோடு, 124 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

வெள்ளத்தால் சுமார் 155,000 வீடுகள்  சேதமடைந்துள்ளதோடு, 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 

சீரற்ற வானிலையால் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில்  நெருக்கடியால் 21 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகரான போர்டோ அலெக்ரேவில் உள்ள குவாபா ஆற்றின் நீர் மட்டம் 8  அடி வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles