NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி…!

கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள்  மோதியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles