NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டுக்காக ஹெரோயின் – தியத்தலாவை பொலிஸாரால் நால்வர் கைது…!

புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கப்படவிருந்த 200 ஹெரோயின் பொதிகளுடன் 4 பேர் தியத்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து தொலைபேசிகள், 3 வங்கி அட்டைகள் முச்சக்கரவண்டி உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 12 இலட்சம் ரூபா என பொலிஸார் மதிப்பிட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles