NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம்!

சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து,

பிரதான முனையங்களில் உள்ள களஞ்சியசாலைகளில் போதிய இருப்புக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது குறித்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, விநியோகஸ்தர்களின் எரிபொருள் ஓடர் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான எரிபொருள் பௌசர்களை ஈடுபடுத்த இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles