NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதை விருந்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கைது!

மொரட்டுவ கட்டுபெத்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதை விருந்தொன்றை நடத்திக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இரண்டு பெண்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்குலான பொலிஸ் கான்ஸ்டபிள் தங்குமிடத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்களை சோதனை செய்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles