NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலி நாணயத்தாள்களுடன் நபர் கைது!

11,500 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வாடகை வேன் சாரதி ஒருவர் மஸ்கெலியா நல்லத்தண்ணி நகரில் வைத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

வலஸ்மூலையைச் சேர்ந்த 45 வயதுடைய வேன் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு சிவனொளிபாத மலைக்கு வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போலி நாணயத்தாள்கள் சிக்கிய நிலையில். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீர்சேகர தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles