NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை இலங்கை தமிழரசுக் கட்சி வழங்கும் – எம்.ஏ.சுமந்திரன்

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை இந்த பாராளுமன்றத் தேர்தலினூடாக இலங்கை தமிழரசுக் கட்சி வழங்கும் என அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் விரும்பியது கிடைத்திருக்கிறது எனவும் மேலும், இந்த தேர்தலில் ஆற்றலுள்ள படித்த இளையோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது மக்கள் விரும்பும் மாற்றத்தின் முதல்; படியாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles