NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்கள் பாவனைக்காக ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட இரட்டை மேம்பாலம் !

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மானப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த முழுமையான திட்டத்திற்கு 5,278,081,272.43 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மாகா பொறியியல் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles