NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலர்வளையங்களுடன் கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே  பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், போலி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு காரணமான முன்னாள் அமைச்சர் கெஹலியவை கைது செய்ய வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை போராட்டக் களத்திற்கு வருகைத் தந்த பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles